தமிழக அரசு பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – 3 நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளி மானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிணத்துக்கடவு பகுதிக்கு அருகில் உள்ள சேரிப்பாளைய அரசுப்பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த சுமார் 19 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பின்னர் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் மாணவர்களின் கற்றல் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் முதல் முழுமையாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் முறையே கடைபிடிக்கப்பட்டு தான் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம்!
அதாவது முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகளை கழுவுதல் மற்றும் சுழற்சிமுறை வகுப்புகள் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிணத்துக்கடவு பகுதிக்கு அருகில் உள்ள சேரிப்பாளையம் அரசுப் பள்ளியில் படிக்கும் சுமார் 760 மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
அந்த பரிசோதனையின் முதல்கட்ட முடிவில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பில் 3 பேருக்கும், 6ம் வகுப்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 2ம் கட்ட முடிவில் மேலும் 10ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.