TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் பெண்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
நாட்டின் முக்கிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் ஆகியவை பாலின விகிதத்தின் பன்முக தன்மையை மேம்படுத்தும் வகையில் பெண் ஊழியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வாய்ப்புகள்:
நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையில் முயற்சியினால் ஐடி துறை பாதிப்பில் இருந்து தப்பித்து விட்டது.
தமிழக அரசு வழங்கும் 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – ஊழியர்கள் கவனத்திற்கு!
இதனால் கடந்த காலாண்டில் வழக்கத்தை விட அதிக லாபத்தை ஈட்டியுள்ளனர். இதன் விளைவால் இந்த துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றது. பல ஐடி நிறுவனங்களும் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து இந்த ஆண்டிற்குள் புதியவர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதிலும், இந்திய பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 16% ஆகக் குறைந்துள்ள நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் 60,000 க்கும் மேற்பட்ட பெண் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நடப்பு ஆண்டில் மொத்தம் 22,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்த நிலையில், பணியமர்த்தப்பட்ட புதிய ஊழியர்களில் 60% பெண்கள் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டிசிஎஸ், தற்போது 1.85 லட்சம் பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் 15,000 முதல் 18,000 பெண் ஊழியர்களை நுழைவு நிலைப் பணிகளுக்கு நியமிக்க திட்டமிட்டுள்ளது. விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் இந்த நிதியாண்டில் சுமார் 50% பெண் வேட்பாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!
இது குறித்து தொழில்துறை அமைப்பான நாஸ்காமின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பாலின விகிதம் 33% ஆக உள்ளது. நாட்டில் டிஜிட்டல் திறமைக்கான தேவை அதிகரித்துள்ளதால் கார்ப்பரேட் துறையில் பெண் வல்லுனர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.