தமிழக அரசு வழங்கும் 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – ஊழியர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் தற்காலிக விடுப்புகளை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக விடுப்பு
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தொற்று தீவிரமடைந்து வந்ததையடுத்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த காலங்களில் அனைத்து வகையான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் உயிர் காக்கும் உன்னத பணியில் சில அரசுத் துறை ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அதில் குறிப்பாக ரேஷன் கடை, காவல்துறை, மருத்துவத்துறை ஊழியர்கள் எவ்வித விடுப்பும் இல்லாமல் பணி செய்து வந்தனர்.
இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மத்திய அரசின் புதிய விதிகள் – குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை!
இப்போது நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில், நோய் தொற்று காலத்தில் ஓய்வில்லாமல் பணிகளை மேற்கொண்டு வந்த ரேஷன் கடை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட மற்ற சில துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட நோய் பரவலின் போது பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் SSC தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இலவச பயிற்சி நாளை தொடக்கம்!
அதாவது நோய் தொற்று காலத்தில் அரசு ஊழியர்கள் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் அவர்கள் மட்டும் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்களுக்கு விளக்கம் அளித்த முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.