TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது டிசிஎஸ் நிறுவனம் புதிய ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பதிவு செயல்முறைகளை இப்பதிவில் காணலாம்.
IT வேலைவாய்ப்பு
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் திட்டத்தின் மூலம் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. சமீப காலமாக IT நிறுவன சேவைகள் மீதான தேவைகள் அதிகரித்து வருவதால் TCS உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ள TCS நிறுவனம் இப்போது பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் எம்.சி.ஏ பட்டம் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி மே 20 ஆகும். இப்போது இந்த பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.
விண்ணப்ப செயல்முறை:
- TCS next step போர்ட்டலில் உள்நுழையவும்.
- இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்
- இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் next step போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
- விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு!
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E./B.Tech/M.E./M.Tech/MCA/M.Sc படித்த மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
- பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ (பொருந்தினால்), பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் ஒவ்வொன்றிலும் 60% அல்லது 6 CGPA என குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்கள் கல்வியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பேக்லாக் எதுவும் இருக்கக்கூடாது.
- கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- அதிகபட்ச கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- முழுநேர படிப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்கிலிருந்து (NIOS) இடைநிலை அல்லது மூத்த இடைநிலைப் படிப்பை முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்:
2 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
வயது:
டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறையில் பங்கேற்க ஒருவர் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.