தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு - தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு - தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13ம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் மாதமே உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் எதிர்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுத்தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், ஜூன் 17 முதல் துவங்க உள்ளது. மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்காத நிலை உள்ளது. எனவே, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்க பொதுச்செயலர் நந்தகுமார், பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தமிழக அரசு அறிவித்தபடி,1ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் படிப்பை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காலத்தில் பெரும்பாலான நாட்கள், மாணவர்கள் வீட்டில் இருந்தால் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. எனவே அந்த தவறு மீண்டும் நடைபெற கூடாது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்?முழு விவரம் இதோ!

அதனால் அரசு அறிவித்தபடி காலதாமதமின்றி உடனடியாக வரும் கல்வியாண்டு பள்ளியை தொடங்கிட வேண்டும். இதற்கு பெற்றோரும், மாணவர்களும், பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். எனவே திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் கோடை விடுமுறை மேலும் 2 வார காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!