இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ (jio) ரூ.101/- மற்றும் ரூ.251/- விலையில் புதிய ஜியோ ஏர் ஃபைபர் பூஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
ஜியோவின் புதிய திட்டங்கள்:
இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் 2ம் இடத்தை பிடித்துள்ள ஜியோ, தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் 2 புதிய ஜியோ ஏர் ஃபைபர் பூஸ்டர் திட்டம் என்னும் கூடுதல் இணைய சேவை திட்டங்களை அறிமுகப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் டேட்டாவை விட கூடுதல் டேட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. பயனர்கள் ரூ.101/- மதிப்புள்ள டேட்டா பூஸ்டர் பேக்கை ரீசார்ஜ் செய்தால் மாதந்தோறும் வழங்கப்படும் டேட்டாவை விட கூடுதலாக 100 ஜிபி இணைய சேவை வழங்கப்படும்.
மற்றொரு பேக்கான ரூ.251/- மதிப்புள்ள டேட்டா பூஸ்டர் பேக்கை ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 500 ஜிபி இணைய சேவை வழங்கப்படும். இந்த போக்கின் கால அளவு ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து சரியாக 01 மாதம் மட்டுமே நீட்டிக்கப்படும். மேலும் பயனர்கள் இந்த போக்கின் கூடுதல் டேட்டாக்களை மாதாந்திர டேட்டா லிமிட் முடிந்த பின்னரே பயன்படுத்த முடியும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் டேட்டாக்களை அடுத்த மாதம் உபயோகிக்க இயலும் அதாவது டேட்டா ரோல் ஓவர் செய்ய இயலாது.