சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை – தமிழக அரசின் புதிய சட்டம்!!

0
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - தமிழக அரசின் புதிய சட்டம்!!

18 வயதிற்கு கீழே உள்ள சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் புதிய வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன சட்டம்:

தமிழகத்தில் வாகன விபத்தினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஏகப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் புதிய மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ரூ.101/- மற்றும் ரூ.251/-ல் ஜியோவின் புதிய திட்டங்கள் – குஷியில் மொபைல் பயனர்கள்!

அதாவது, 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிபட்டால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாகன உரிமையாளரின் RC தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் தமிழகத்தில் இது போன்ற தவறுகள் நடைபெற்றால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன சட்டப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!