தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெறுவோர் கவனத்திற்கு – மேல்முறையீடு மனு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பெயர் பட்டியலில் இடம் பெறாதவா்கள் வரும் 12-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா கால கட்டத்தில் அரசு உள்ள நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடைகளையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி பெறுபவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் வெளியீடு!
இதன் அடிப்படையாக வைத்து தங்க நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தகுதி இருந்தும் நங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறினார். தேர்தலின் போது பொதுவாக நகைக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூறி விட்டு தற்போது நிபந்தனைகள் விதிப்பது நியமற்றது என்று நகைக்கடன் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர். இது குறித்து ஆராயப்பட்டு தகுதி பெற்றோர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தள்ளுபடி பெயர் பட்டியலில் இல்லாதோர் மனு தாக்கல் செய்யலாம் என்று அரசு தெரிவித்தது.
இதனையடுத்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் மாவட்ட இணையதளத்தில், கடந்த, மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் கடன் தள்ளுபடியில் பயன்பெற விருப்பும் தகுதியுடையோர் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல், திருச்செங்கோடு சரக துணை பதிவாளரிடம், எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரத்துடன் மே 12ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இணைப்பதிவாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.