வாட்ஸ் ஆப் பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் வெளியீடு!
இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் கீழ் வரும் தொகுப்பில் பார்ப்போம்.
வாட்ஸ் ஆப் நிறுவனம்
உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் செயலி ஆகிவிட்டது. இதில் பயனர்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால்,அதன் பின் பயனாளிகள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் முறையை மாற்றி விடுவார். மேலும் ஒரு சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த செயலியை பயனர்களும் மிகவும் விரும்புகின்றனர். இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் இப்போது உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்று பேசி கொள்ளலாம்.
வங்கியில் பட்டதாரிகளுக்காக 696 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10!
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனால் பயனர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. அது குறித்து விளக்கமாக கீழே பார்ப்போம். அதனை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்றே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதியை கொண்டு வரும் முயற்சியில் வாட்ஸப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலில் யாராவது ஸ்டேட்டஸ் போட்டால், அது சேட் லிஸ்ட்டில் இருப்பவரின் புகைப்படத்தை சுற்றி வட்டமாக காண்பிக்கும். அதை க்ளிக் செய்து நேரடியாக ஸ்டேட்டஸை பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதியை தற்போது வாட்ஸப் நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் அமல்படுத்த உள்ளது. மேலும் தற்போது பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.