தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விவசாயிகளின் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக விவசாயிகள் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை விதி 110 என்பதன் கீழ் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது ஆய்வில் கண்டறியப்பட்டது . அத்துடன் இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதனால் தள்ளுபடி பெற தகுதியான நபர்களை ஆராய்ந்து அதன் பின்னர் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 48,84,726 பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தனர். இதில் 35,37,693 பேர் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் முடிந்த பிறகு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள் இதோ! ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோயில் ஒன்றியம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 405 விவசாயிகள் நகைக்கடன்கள் பெற்றுள்ளார்கள். இதில் இதுவரை 10 விவசாயிகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 395 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் இங்குள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தங்களுக்கு உடனடியாக நகைக்கடன் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.