ஆபத்தில் இருந்து தப்பிக்கும் ஜீவா, பயத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவிற்கு ஆபத்து வருவது போலவும், மூர்த்தியின் கனவில் அம்மா வந்து இந்த வீட்டை மாற்ற சொல்வது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் புதிய மாற்றங்களை நாம் பார்க்க வாய்ப்புகள் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
மூர்த்தி நெஞ்சுவலி வந்து வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக தனம் தான் கடை வேலையையும் சேர்த்து செய்து கொண்டிருக்கிறார். இதனால் வீட்டில் மீனாவிற்கு, ஐஸ்வர்யாவிற்கும் அடிக்கடி வருகிறது. அவர்களின் சண்டையை யாராலும் தீர்த்து வைக்க முடியவில்லை. இதனால் வீட்டில் இருக்கும் மூர்த்தி மிகவும் கவலை படுகிறார். இதற்கு கடைக்கே சென்று நினைக்கிறார். இந்நிலையில், அன்று இரவு தூங்கும் போது மூர்த்தியின் கனவில் லட்சுமி அம்மா வருகிறார்.
தமிழகத்தில் பல்கலைக்கழக மேம்பாடு குறித்த மாநாடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அப்போது, கதிர் சண்டை போட்டு வீட்டை விட்டு சென்று விட்டார், இப்போது கண்ணனின் மனைவியும், ஜீவாவின் மனைவியும் எப்போது பார்த்தாலும் சண்டை போடுகின்றனர். இவர்களும் என்னை விட்டு தனியா போய்டுவாங்களான்னு தனக்கு பயமாக இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். அதற்கு லட்சுமி அம்மா இந்த வீட்டை மாத்துங்கப்பா எல்லாம் சரி ஆயிடும் என்று சொல்கிறார். உடனே கனவு களைந்து மூர்த்தி முழித்து விடுகிறார்.
Exams Daily Mobile App Download
காலையில், ஜீவா குளித்து விட்டு வரும் போது அருகில் ஓடு விழுந்து உடைகிறது. கொஞ்சம் அருகில் இருந்தாலும், ஜீவாவிற்கு காயம் பட்டிருக்கும். இதனை பார்த்து அனைவரும் பயத்தில் உறைந்து விட்டனர். மீனா மூர்த்தியிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார். உடனே, மூர்த்திக்கு லட்சுமி அம்மா கனவில் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்த வீட்டை மாற்றுவது குறித்து மூர்த்தி யோசிக்க தொடங்கிவிட்டார். இதனால் இனி வரும் எபிசோடுகளில் இது குறித்த காட்சிகளை நாம் காணலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்