தமிழகத்தில் பல்கலைக்கழக மேம்பாடு குறித்த மாநாடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் பல்கலைக்கழக மேம்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, இந்த மாநாட்டில் கலந்துரையாடியது குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மேம்பாடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இந்த பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாடு கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்டனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் என 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.
அதாவது, இந்த மாநாடு கூட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது, உயர்கல்வித்துறை மேம்பாடு குறித்து விவாதம் மற்றும் மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதம் செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவது மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது ஆகியவை குறித்தும் விவாதம் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் குறைப்பு? முக்கிய தகவல்!
மேலும், தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது குறித்தும், கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய தர வரிசையில் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சில கல்விநிறுவனங்கள் இடம் பெற்று வருகிறது. இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்