தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் குறைப்பு? முக்கிய தகவல்!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு கட்டணம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
RTE கல்வி கட்டணம்:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு 25% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதற்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். இந்த கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு இருக்க வேண்டும் போன்ற நிபந்தைகள் உள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு வழங்கும் கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை 2022 – 2023 ம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது
EPFO திட்ட கணக்கில் இந்த விதிமுறை நீக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!
அதாவது 1 முதல் 5ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர் ஒருவருக்கு 12 ஆயிரத்து 76 ரூபாய் 85 காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல 6 மற்றும் 7, 8-ம் வகுப்புகளில் சேருபவர்களுக்காக 15 711 ரூபாய் 31 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை கடந்த ஆண்டைவிட கட்டணத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் படி இந்த ஆண்டில் ரூ.380 முதல் ரூ.1,360 வரை கட்டணத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்