ஆகஸ்ட் மாதத்தில் JEE Main தேர்வுகள் – NEET செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு?
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பொறியியல் நுழைவுத் தேர்வான JEE Main தேர்வுகளை நடத்துவதற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தெரிகிறது.
JEE தேர்வு:
கொரோனா பரவல் எதிரொலியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள JEE மற்றும் NEET நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத்தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!
மேலும் தேர்வுகளை நடத்துவதற்காக, மாநிலங்கள் தோறும் உள்ள கொரோனா நிலைமையை ஆய்வு செய்யும் பணிகளில் மத்திய அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், ‘நிலுவையில் உள்ள JEE-Main தேர்வுகளை ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த, அதாவது பதினைந்து நாட்கள் இடைவெளியுடன் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், NEET நுழைவுத்தேர்வு செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்படலாம்’ என்றும் கல்வித்துறையின் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒரு ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும் JEE-Main தேர்வின், முதல் கட்டம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திலும், அடுத்த கட்டங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்த பின்னர், ஜூலை 3 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட்-யுஜி தேர்வுகளை நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.