புதுச்சேரியில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!

0
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை - இன்று முதல் துவக்கம்!
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை - இன்று முதல் துவக்கம்!
புதுச்சேரியில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!

புதுவை, காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை:

கொரோனா அச்சம் காரணமாக புதுவை, காரைக்கால் பகுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பிளஸ் 1 மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்று மானவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் குழப்பம் தீரும் வகையில் கல்வித்துறை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுவை, காரைக்கால் பகுதியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!

மேலும் இந்த சேர்க்கைக்காக அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை வழங்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூன் 23) முதல் விநியோகிக்கப்படும் என்றும் அதனை பூர்த்தி செய்து ஜூலை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஜூலை 12ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 14ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும். அதேபோல் ஜூலை 19ம் தேதி காலியிட விவரம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 21ம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும். இதை அடுத்து ஜூலை 22ம் தேதிக்கு காலியிட விவரம் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 23ம் தேதி முதல் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!