கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை, ஒரு கிலோ ரூ.2000 – வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தொடர் மழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக மல்லிகை பூ விலை அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
பூ விலை உயர்வு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கிய கொரோனா பரவலால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கடைகள், நடைபாதை கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு தளங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில்கள் கடும் சரிவை சந்தித்தது. அன்றாட வேலைகள் செய்து பணம் ஈட்டுபவர்கள் மிக சிரமப்பட்டனர். அரசின் முயற்சியால் கொரோனா தொற்று ஓரளவு குறைந்த போது வியாபாரிகளின் நலன் கருதி அரசு தளர்வுகளை அளித்தது.
அரசு நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் – அரசு அனுமதி!
இந்த நேரத்தில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய தொடங்கினர். ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பொது மக்கள் வெளியில் வரவில்லை இதனால் வியாபாரம் பழைய நிலையில் இல்லை. தற்போது கொரோனா தடுப்பூசி பயன்பட்டால் தொற்று எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.
தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
வியாபாரிகள் லாபம் ஈட்டி வரும் மல்லிகை பூவின் விலையும் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 5 டன் மல்லிகை பூ இந்த முறை மார்க்கெட்டிற்கு ஒரு டன் வரை மட்டுமே வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ 800 ஆக விற்கப்பட்டது. தற்போது நாளை தீபாவளி பண்டிகை மற்றும் மழையின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 2000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மக்கள் பூக்களை அதிகம் வாங்கும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ள பூ விலையால் பூ வாங்க தயக்கம் காட்டுகின்றனர். அதனால் வருமானம் இல்லை என்று வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.