அரசு நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் – அரசு அனுமதி!
கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு அரசு நுழைவுத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவுபெற்றுள்ள நிலையில் அதற்கான வகுப்புகளை மீண்டும் துவங்க டெல்லி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
பயிற்சி துவக்கம்
டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு நுழைவுத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி திட்டம் 2020ம் ஆண்டு உருவான கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் டெல்லியில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டது. இந்நிலையில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி திட்டத்தை மீண்டும் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
அந்த வகையில் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் தனியார் பயிற்சி மையங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார். இதனுடன் பயிற்சி வகுப்புகளும் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது பயிற்சிக்கான தகுதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் தேர்ச்சியும் விண்ணப்பதாரர்கள் தயாராகும் போட்டித் தேர்வுக்கான தகுதி வரம்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்திட்டம் JEE, NEET, CLAT, Civil Services, Banking, Railways, SSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கும் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் பயண செலவுகளை சந்திக்க ஒவ்வொரு மாணவருக்கும் படிப்புக் கட்டணத்தைத் தவிர ரூ.2,500 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெறும் நிறுவனத்தில் இருந்து இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம். அந்த நிறுவனம் 46 எம்பேனல் பயிற்சி மையங்களில் ஒன்றாக இல்லாவிட்டால், தகுதியுடைய மாணவருக்கு ரூ.1 லட்சம் வரையும், கூடுதல் பாடங்களுக்கு ரூ.40,000 வரையும் கட்டணத் தொகையை அரசு வழங்கும்.
டிச.8ல் TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
இதனுடன் சிவில் சேவைகளுக்கான வஜிராம் அல்லது பொறியியல், மருத்துவத் தேர்வுகளுக்கான FIITJEE மற்றும் ஆகாஷ் போன்ற சில பெரிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பதாரர்கள் எம்பேனல் செய்யப்பட்ட பயிற்சி மையங்களின் பட்டியலை scstwelfare.delhigovt.nic.in மூலம் தெரிந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.