யானைக்கு அடி சறுக்கிருச்சு.. புத்தி கெட்டு குணசேகரன் செய்த காரியம் – ஜனனி ஆட போகும் ஆட்டம்!
பரபரப்புக்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் டெலிகாஸ்ட் செய்யப்படும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து கதைக்களம் எவ்வாறு நகர இருக்கிறது என இப்பதிவில் காண்போம்.
எதிர்நீச்சல்:
ஆண்களால் அடிமையாக நடத்தப்படும் வீட்டில் மருமகள் ஆகிறாள் பகுத்தறிவு மிக்க பெண்ணான ஜனனி. அவள் எவ்வாறு போராடி பெண் சுதந்திரத்தை மீட்கிறாள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் மையக்கதை. ஒரு சமயத்தில் கணவனால் கைவிடப்பட்டதை ஜனனி உணரும் பொழுது யோசிக்காமல் வீட்டை வெளியேறி தற்போது மீண்டும் சிங்கப்பெண்ணாய் குணசேகரன் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பட்டமா அப்பத்தா ஜனனிக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் குணசேகரன் தற்போது வரை வாயை மூடிக்கொண்டு இருக்க ஒரே காரணம் 40% சொத்து பட்டமா அப்பத்தா பெயரில் இருப்பதால் தான். எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் குணசேகரன் சொத்து விஷயத்தில் இப்படி கோட்டை விட்டு விட்டாரா என பார்க்கும் நமக்கும் ஆச்சிரியமே.
Exams Daily Mobile App Download
தம்பிகள் இதுகுறித்து கேக்கும் பொழுது அதை அவரே ஒப்புக்கொண்டிருப்பார். எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாத போதே குணசேகரனை விரட்டிய ஜனனிக்கு தற்போது கையில் ஆயுதமே கிடைத்துள்ளது. இதை வைத்து கண்டிப்பாக குணசேகரனை ஒரு வழி செய்வார் ஜனனி என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.