தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் – ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ரத்து?
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ரத்து?
தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலால் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு திடீரென கடும் கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் பருவத்தேர்வில் மாற்றம்? முக்கிய அறிவிப்பு!
இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஜன.14 முதல் 16ம் தேதி வரை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை புகழ் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் விளையாட்டு போட்டிகள் 50% பார்வையாளர்கள் கொண்டு நடத்துபடி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கும் பொருந்துமா என்று அரசு விளக்கம் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் ஜன.9ம் தேதி முழு ஊரடங்கு – போட்டி மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பது சந்தேகம் தான். அதற்காக பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜன.14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு மற்றும் 16ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை மாற்றவும் வாய்ப்பு இல்லை. எனவே கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில் போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.