அரசு துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – DA குறித்த தகவல்!

0
அரசு துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - DA குறித்த தகவல்!
அரசு துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு - DA குறித்த தகவல்!
அரசு துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – DA குறித்த தகவல்!

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சில மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதனை பற்றி 7வது ஊதியக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அரசு ஊழியர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முறையே அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வுக்காக இன்னும் காத்திருக்கும் நிலையில், பல மாநில அரசுகளின் ஊழியர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி கிடைத்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு DA/DR விகிதத்தை உயர்த்துகிறது. DA உயர்வின் அளவு சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட AICPI-IW தரவை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 16, 2022 அன்று, சத்தீஸ்கர் அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் தனது ஊழியர்களுக்கான டிஏவை 6% முதல் 28% வரை உயர்த்தியது. 6வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு, மாநில அரசு 15% அகவிலைப்படியை உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் தனது ஊழியர்களுக்கு DA/DR ஐ 3% உயர்த்தியது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டார்.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

Exams Daily Mobile App Download

மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வால் குஜராத் அரசின் சுமார் 9.38 லட்சம் ஊழியர்கள், பஞ்சாயத்து சேவை மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். குஜராத்தில் DA உயர்வு ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். மகாராஷ்டிர அரசு தனது ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலம், மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் DA 34% ஆக உயர்ந்துள்ளது, இது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உள்ளது. மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். தமிழக அரசும் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த மாதம் 3% DA/DR உயர்வை அறிவித்துள்ளது. சமீபத்திய உயர்வால், தமிழக அரசு ஊழியர்களின் DA விகிதம் 34% ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் DA உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!