சேமிப்பு திட்ட கணக்குத்தாரர்களுக்கு ஜாக்பாட் – அக்டோபர் முதல் வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவில் மக்கள் தற்போது சிறு சேமிப்பு திட்டங்களில் சேர அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த நேரத்தில் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறுகின்றனர். எந்தெந்த திட்டங்களில் வட்டி விகிதம் கூடும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
வட்டி விகிதம்:
இந்திய மத்திய ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளில் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டது. அதே போல சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் சேமிப்பு கணக்குதரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதங்கள் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
எப்போதும் அரசுப்பத்திரங்களின் அடிப்படையில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வட்டி விகிதம் உயரவிருக்கிறது. நடப்பு மாதத்தின் இறுதியில் சேமிப்பு திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வட்டி விகிதங்கள் அக்டோபர் மாதத்தில் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் செல்வமகள் அல்லது சுகன்யா சம்ரித்தி திட்டங்கள் போன்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயரும்.
தமிழக பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அழைப்பு – ஆட்சியர் தகவல்!
அதாவது பிஎப் திட்டத்தில் வரும் காலாண்டில் 7.56 சதவீதம் வரை உயரக்கூடும். அதே போல செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதம் 8.3 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதங்கள் முதிர்வு கால அடிப்படையில் கணக்கிடப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பத்திர ஈட்டுத் தொகையானது தொடர்ந்து 7% மேல் உள்ளது. அதனால் வரும் காலாண்டில் வட்டி விகிதம் மாற்றப்பட உள்ளது .
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்