தமிழக பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அழைப்பு – ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மூலமாக வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை பதிவு செய்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு பதிவு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு செய்து தரப்படும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு மேற்கொள்ள வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதையடுத்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் – சென்னை மாநகராட்சி அதிரடி!
மேலும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் கடந்த 2021-2022ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பெண் சான்றிதழை பெற்று கொண்ட மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்வாறாக 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை பெற்ற பின்பு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் முறை மூலமாகவோ வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதையடுத்து புதிதாக பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு தற்போது இ சேவை மையம் மூலமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதனை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்