பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் – சென்னை மாநகராட்சி அதிரடி!
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய வசதிகளை கொண்டு வர உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிசிடிவி கேமரா
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் முதற்கட்டமாக நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் 90 நடுநிலைப்பள்ளி, 37 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 29 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட 156 பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, பள்ளிகளில் நுழைவுவாயில், மைதானம், வளாகம் மற்றும் பிற பகுதிகளில் என 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் நாளை (செப். 16) இந்த பகுதிகளில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து இந்த சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை 24 மணி நேரமும் அந்தந்த பள்ளி நிர்வாகம் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதால் மாணவர்கள் பள்ளிகளில் இருக்கும் நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முடியும். அத்துடன் மாணவர்களுக்கு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். இந்த கேமராக்கள் பொருத்த 5.4 கோடி அரசு சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்