தமிழகத்தில் நாளை (செப். 16) இந்த பகுதிகளில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே அரசின் ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது. அதனால் மின்சார பழுது ஏற்படாமல் இருக்க மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (செப் 16) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மின்தடை பகுதிகள்:
தமிழக மின்சார துறை என்பது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் மின்சாரமும் இன்றியமையாததாக இருக்கிறது. இந்நிலையில் 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுவதால் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் செய்வது கட்டாயமாகும். அந்த வகையில் மாதந்தோறும் குறிப்பிட்ட உபமின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அதனால் மின்சாரம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்படுகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்களையும் மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவிக்கின்றன. அந்த வகையில் நாளை (செப். 15) கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் அந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் நாளை காலை முதல் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதன் படி கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம் துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி உபமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார். அதனால் அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்