சிலிண்டர் பயனர்களுக்கு ஜாக்பாட் – ரூ.22,000 கோடி மானியம்! அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியத்தொகையை உயர்த்த கோரிகைகள் எழுந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் விலை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் எதிர்பாராத அளவு உயர்ந்து சிலிண்டர் பயனர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. கடந்த 2020 – 2022ம் ஆண்டுகளில் மட்டும் சமையல் எரிவாயு விலை சுமார் 300% அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நேரத்தில் சிலிண்டருக்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தது. மேலும் மானியத்தொகை குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விலை உயர்வு, மானியத் தொகை குறைப்பு போன்ற காரணங்களால் சிலிண்டர் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் மானியத்தொகை ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தினர்.
நெருங்கும் தீபாவளி பண்டிகை – சென்னை காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் 3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,000 கோடி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் மானியச் செலவு ஏற்படும் என்பதால் தற்போது அதற்கு நிவாரணம் வழங்கும் வகையில் மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்