நெருங்கும் தீபாவளி பண்டிகை – சென்னை காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையின் முக்கிய அங்கமாக விளங்குவது பட்டாசு. தற்போது இதன் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புராண கதைகளின் படி இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய போது மக்கள் அவரை வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளை வாசலில் ஏற்றினர். இதனையே நாம் தீபாவளியாகக் கொண்டாடி வருகிறோம். மற்றொரு கதை என்னவெனில் மக்களுக்கு தீங்கு செய்து வந்த அசுரன் நரகாசுரனை மகாவிஷ்ணு வதம் செய்தார்.
அன்றைய தினம் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பல கதைகள் உண்டு. இந்த தீபாவளி குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. அன்றைய நாளில் புத்தாடைகள் அணிந்தும், பல வகையான உணவுகளை சமைத்தும் இனிப்புகளை பரிமாறியும் பண்டிகையை கொண்டாடுவர். மற்றொரு புறம் தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசு தான். இந்த பட்டாசு மகிழ்ச்சியை வெளிப்படுத்தில் ஒரு அங்கம் வகிக்கிறது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை (அக். 14) மின்தடை – எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!
Exams Daily Mobile App Download
இந்த தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகையான பட்டாசுகளை வாங்கி வெடிப்பர். சில நேரங்களில் இந்த பட்டாசு தீ விபத்துக்களையும், காயங்களையும் ஏற்படுத்துகிறது. அதனால் பட்டாசை கவனத்துடன் கையாள வேண்டும். தற்போது தமிழகத்தில் சென்னை காவல்துறை சார்பில் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மேலும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை அதே போல இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்