பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை (அக். 14) மின்தடை – எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!
தமிழகத்தில் பண்டிகை காலம் காரணமாக தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் பல மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (அக்.14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்துவது மூலமாக, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால், மின்சார விபத்துகள் அதிகம் தடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மின்சார பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நாளை (அக். 14) பரமத்தி வேலூர் வட்டம், ஜோடர்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், அந்த பகுதிகளில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜேடர்பாளையம், சிறுநல்லிக்கோவில், கொத்தமங்கலம்,குறும்பலமகாதேவி, கருக்கம்பாளையம், காளிபாளையம், கண்டிபாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், கரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனத்தில் வேலை! ஊதியம் ரூ. 16,557!
Exams Daily Mobile App Download
மேலும் வடுகபாளையம், நாய்க்கனூர், கள்ளுக்கடைமேடு, அரசம்பாளையம், எலந்தக்குட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும் பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சோழசிராமணி, சின்னாம்பாளையம், சித்தம் பூண்டி, ஜமீன்இளம்பள்ளி, சத்திபாளையம், சுள்ளிபாளையம், சித்தம் பூண்டி,இ. நல்லாகவுண்டம்பாளையம், மாரப்பம்பாளையம், பி. ஜி, வலசு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்