தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியம் வழங்க உத்தரவு!
தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து கடந்த 2016ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியம் அறிவிப்பு
சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம், ஊதிய உயர்வு ஆகியவற்றில் உயர்வுகளை எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நீண்ட கால கோரிக்கைகளை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்களுக்கு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் இப்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெற்று கடந்த 2016ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, 1998 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
டாட்டா நினைவு மையத்தில் Data Entry வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இது குறித்த மனுவில் 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டது பாரபட்சமானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடந்த 2016ம் ஆண்டு முதல் 2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது என்பதால் 2016க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் அந்த அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத்தொகையும் வழங்க வேண்டும் என நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.