தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 14 % அகவிலைப்படி உயர்வு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதலான செலவினம் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த ஜூன் 7 முதல் 9 தேதி வரை என 3 நாட்கள் வரை வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அத்துடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை செயல்படுத்தி வந்தனர். ஏனெனில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி பெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு இது தொடர்பாக அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று முதல் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் 28% அகவிலைப்படியை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக அரசுக்கு 73 கோடி ரூபாய் வரை கூடுதலாக செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.