ஆதார் அட்டைதாரர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – வீடு தேடி வரும் சேவை! புதிய வசதி அறிமுகம்!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை நாம் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். தற்போது வீட்டிலிருந்தபடியே ஆதாரை அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
ஆதார் அப்டேட்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. மேலும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஆதார் எண் வழங்கப்படுகிறது. இது பால் ஆதார் எனப்படுகிறது. மேலும் பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு வழங்குகிறது. இதில் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை ஆதாரமாக கொண்டு குழந்தைக்கு ஆதார் அட்டை பெறலாம். மேலும் ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று ஆதார் மையத்தில் நேரடியாக ஆதார் பெறலாம். அதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை தயாரிக்க கைரேகை மற்றும் கண் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை.
Exams Daily Mobile App Download
தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம், முகவரி ஆகிய விவரங்களை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். முதலில் நாம் ஆதாரில் அப்டேட் மேற்கொள்ள ஆதார் மையம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நாம் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யும் வசதி வந்துவிட்டது. இனி மொபைல் நம்பர் புதுப்பிப்பு அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் போன்ற திருத்தங்களுக்கு ஆதார் மையம் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் மக்களுக்கு ஆதார் சேவைகளை வீட்டிற்கே சென்று வழங்க 48,000 தபால்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Amazon நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி படித்தவர்கள் உடனே விரையுங்கள்..!
இதுவரை 1.5 லட்சம் தபால்காரர்கள் இரண்டு தனித்தனி கட்டங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு ஆதார் சேவை வழங்க கேஜெட், டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் அடிப்படையிலான ஆதார் கிட் வழங்கப்படும். இது விவரங்களை புதுப்பிக்க பயன்படுத்தப்படும். மேலும் தபால்காரர்கள் புதிய ஆதார் அட்டையை நீங்கள் பெறவும் உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் எங்கும் அலையால் வரிசையில் காத்திருக்காமல் ஆதார் திருத்தம் செய்யப்படுவதால் மக்களால் இத்திட்டம் வரவேற்கப்படுகிறது.