தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை உயர்வு!

0
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - கல்வி உதவித்தொகை உயர்வு!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - கல்வி உதவித்தொகை உயர்வு!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை உயர்வு!

தமிழகத்தில் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உதவித் தொகையை மத்திய அரசு வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டு வேலைக்கு செல்கின்றனர். அதனால் தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த இடைநிற்றலை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.

பிப்.20 வரை தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து தற்போது தமிழக அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்காக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை மத்திய அரசுக்கு இணையாக வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பில், தமிழகத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2,100 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது 4000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தினசரி வீட்டிற்கு சென்று வரும் மாணவர்களுக்கு 1200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை தற்போது 2500 ரூபாய் வரை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

இதனை தொடர்ந்து டிப்ளமோ படிப்பு பயிலும் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தால் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2700 ரூபாய் வழங்கப்பட்டு வருவதை 9500 ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளது. மேலும் நாள்தோறும் வீட்டிற்கு செல்லும் மாணவர்களுக்கு 1680 ரூபாயிலிருந்து 6500 ஆக உயர்த்தி உள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 4200 ரூபாயை 13500 ரூபாய் வரை உயர்த்தி வழங்க உள்ளது. அத்துடன் தினமும் வீடு செல்லும் மாணவர்களுக்கு 2100 ரூபாயிலிருந்து இனிமேல் 7000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!