பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கியின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று ராப் பாடகி ஐக்கி பெரி வெளியேற்றப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியேறியவுடன் இன்று அவர் தனது முதல் பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
ராப் பாடகி ஐக்கி பெரி
விஜய் தொலைக்காட்சியில் அனைவர்க்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த முறை 17 போட்டியாளர்களுடன் துவக்கப்பட்டது. பலரும் இந்த முறை புதிய முகங்களாக இருந்து வந்தனர். தற்போது வரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், புதிதாக மூவர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நிலைந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இந்த முறை நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
இந்த முறை 6 பேர் நாமினேஷனில் இருந்து வருகின்றனர். அதில் ராப் பாடகி ஐக்கி பெரி குறைந்த ஓட்டுகள் பெற்றுள்ளதால் அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவருக்கு தங்களது ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நபர் சில நாட்களுக்கு பிறகு தான் இன்டெர்வியூ மற்றும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் செய்வர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு எண்டு கார்டு? அதிர்ந்து போன ரசிகர்கள்!!
ஆனால், ஐக்கி சற்று வித்தியாசமாக வெளியே வந்தவுடன் தற்போது தனது முதல் பதிவினை பதிவேற்றி உள்ளார். அதில் அமைதியாக இருப்பது தைரியம் இல்லாமல் இருப்பது கிடையாது என்பதனை புரிந்த கொண்டேன். தைரியமாக இருப்பது என்பது பயப்படாமல் இருப்பது அல்ல என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கூடுதலாக, தனக்கு ஆறுதல் அளித்த அனைவர்க்கும் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.