விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு எண்டு கார்டு? அதிர்ந்து போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது நிறுத்தப்பட போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்திருக்கும் ஒரு சீரியல் தான், பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். ஒரு ஜாடையில் அவர் நடிகை ரோஷினி போலவே இருப்பதால் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று தான் கூற வேண்டும்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய ‘ஜக்கி பெரி’ – ரசிகர்கள் அதிர்ச்சி!
இது ஒரு புறம் இருக்க, இந்த சீரியலில் முக்கிய கட்டமாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் 6 மாதங்கள் இருக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் கண்ணம்மா மட்டுமின்றி பாரதி குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதே போல் வெண்பா அஞ்சலிக்கு மாத்திரையை மாற்றி எழுதி கொடுத்தது பற்றி பாரதி தெரிந்து கொள்கிறார். வெண்பாவை நன்றாக திட்டியும் விடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம், அந்த சீரியலில் கதாநாயகன் பாரதியாக நடிக்கும் நடிகர் அருணின் இன்ஸ்டாகிராம் பதிவு தான். அவர் ஹாவலி செல்ல இருப்பது போலவும் கீழே கேப்சனாக ‘பல நாட்கள் பாரதியாக இருந்து விட்டு தற்போது அருணாக இருக்கிறேன்’ என்று பதிவேற்றி உள்ளார். இதனால் சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் அடுத்து வரும் எபிசோடிற்கான ஷூட்டிங்கை முடிந்து விட்டு தற்போது வெளி ஊர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.