மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் ஐடிஐ மாணவர் சேர்க்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை :
தமிழகத்தில் 2020-2022ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லுரிகளிலும் நடைபெற்று வருகிறது. அதற்கான அறிவிப்புகளை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது.
பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வும் ஆன்லைன் வெளியக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் தரவரிசை பட்டியலை கல்லூரியின் அதிகார பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் 15 ம் தேதி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
இங்கு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிகணினி, பாட புத்தகங்கள், சீருடை, ஷூ, மிதிவண்டி, வரைபடா கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். மாணவர்கள் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9380114610, 8072217350 ஆகிய தொலைபேசி எண்ணை தொடபு கொண்டு அறியலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.