பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – ஆட்சியர் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனுமதி மறுப்பு :
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் 1957ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது நினைவிடம் பரமக்குடி பகுதியில் உள்ள முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து கட்சி தலைவர்களும் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவர்.
இந்திய ரயில்வே குரூப் D காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – ட்விட்டர் ட்ரெண்டிங்!
அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்தாண்டு செப்டம்பர் 1 ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வருகிறது. அதனால் அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
தடுப்பு பணியின் மற்றொரு பகுதியாக இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அரசியல் தலைவர்கள் தங்களது வாகனங்களுக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.