எல்லைக் காவல் படையில் Constable காலிப்பணியிடங்கள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP) ஆனது Constable பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு தொடக்கம்:
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் ஆனது Constable பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Constable பணிக்கென மொத்தம் 287 கலைப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ONGC Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- உதவித்தொகை || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
Exams Daily Mobile App Download
வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் PET, PST, Written Test, Skill Test Document Verification மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று (23.11.2022) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 22.12.2022 ஆகும்.