தமிழகத்தில் அக்.06ம் தேதி வரை மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. இதனையடுத்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும். டிசம்பர் மாதம் வரை மழை நீடிக்கும். எப்போதும் தென்மேற்குப் பருவமழை இயல்பாக 33 செ மீ பெய்யும். ஆனால் நடப்பாண்டு 54 சதவிகிதம் கூடுதலாக பெய்தது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் போராட்டம் – ஆளுநரின் எச்சரிக்கை!
இது இயல்பை விட அதிகம். அதே போல வடகிழக்கு பருவமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 2,3, 4,5,6 ஆகிய 5 நாட்களும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
Exams Daily Mobile App Download
குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அதனால் இன்று முதல் 5ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்