தமிழகத்தில் உள்ள வீடுகளில் இனி இது கட்டாயம் – மின்சார வாரியம் புதிய உத்தரவு!
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மின்சாரத்துறை தற்போது நவீன மயமாக்கி வருகிறது. இந்நிலையில் மின்சார விபத்துகளை தவிர்க்க வீடுகளில் இந்த கருவியை கட்டாயம் பொறுத்த வேண்டும் என மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மின்சாரத்துறை உத்தரவு:
தமிழகத்தில் மின்சாரத்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக மக்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதனை தடுக்க மின்சார வாரியம் சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி பழைய வயர்கள், சரியாக கனெக்சன் கொடுக்காதது ஆகிய காரணங்களால் தான் மின் கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. அதனை தடுக்க வீடுகளில் ட்ரிப்பர்கள் பயன்படுத்த வேண்டும். ட்ரிப்பர்கள் பயன்படுத்தினால் மின் கசிவை தடுக்கவும், அதிக ஓல்டேஜ் காரணமாக மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும், அதனால் இனி தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் ட்ரிப்பர்கள் பொறுத்த வேண்டும் என மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.