புதிய வேலை நாடுநர்களை காத்திருப்பு பட்டியலில் வைத்த ஐடி நிறுவனங்கள் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!
இன்ஃபோசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்ச்சர் மற்றும் மைண்ட்ட்ரீ போன்ற பல நிறுவனங்களும், தங்கள் நிறுவனத்தில் புதிய நபர்களை நியமிப்பதை இடை நிறுத்தம் செய்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்:
அதிக அளவிலான புதிய ஊழியர்களை நியமித்து வந்த ஐடி நிறுவனங்கள் தற்போது புதியவர்களை நியமிப்பதில் மௌனம் ஆக உள்ளது. இது படித்த இளைஞர்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இது உண்மை நிலை இல்லை என்றும், புதிய பயனர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் நிறுவனங்கள் கூறி வந்தது. இந்நிலையில், பிக் ஃபோர் என்ற நிறுவனம் புதிய பணியாளர்களை நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதில், இன்ஃபோசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்ச்சர் மற்றும் மைண்ட்ட்ரீ போன்ற பல நிறுவனங்களும் முன்பு அறிவித்தபடி, ஆஃபர் லெட்டர்கள் அல்லது ஆன்போர்டிங் லெட்டர்களுக்காக வேலை நாடுநர்களை காத்திருக்க வைத்துள்ளன. டெலாய்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 2021ல் நியமன கடிதத்தை பெற்ற நபர் தற்போது வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்.24ம் தேதி மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆலோசனைத் துறையின் அசோசியேட் அனலிஸ்ட் பதவிக்கான நியமன கடிதம் பெற்ற மற்றொரு நபர் பல மாதங்களாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது போல் 500 பேர் நியமனத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிறுவனம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், அது வரையில் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.