தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கல் – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திட்டமாக செயல்படுத்தி வருகிறார். பதவியேற்றவுடன் 5 முக்கிய வாக்குறுதிகளில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டார். மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவிட்டர்.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தகவலை மாற்றும் அம்சம்!
நிவாரண தொகைகள் 2 தவணைகளாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 200 குடும்பங்கள் வீதம் வழங்கப்பட்டது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் 1000 வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் புதிய ரேஷன் கார்டு வேண்டி ஏராளாமானோர் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பித்தவர்ளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் தரமான, உணவு பொருட்கள் தங்குதடையின்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும், சரியாக எடையில் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டார், அதனை தொடர்ந்து புதிதாக குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.