ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? உங்களுக்கான பதிவு தான் இது.. IRCTC வழங்கும் சேவை!
இந்தியாவில் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெறுவது சற்று கடினமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையிலான சில வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இத்தகைய சூழலில் ரயிலில் டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே முடிந்து விடுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான “சிற்பி” திட்டம் – உலக சாதனை சான்றிதழ் பெற்று அசத்தல்!
Follow our Instagram for more Latest Updates
இறுதி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் கிடைப்பதில்லை. இந்தியாவில் தற்போது ஹோலி பண்டிகை வரவுள்ளதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதிலிருந்தே டிக்கெட்டை முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். தற்போது டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த பயணிகள் IRCTC இணையத்தளத்தை நடலாம்.
இதன் மூலம் நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை பெறும் வாய்ப்பு அதிகம். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் ரயில்வே வாரியத்தின் IRCTC இணைத்தளத்தில் VIKALP என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மற்றும் அதே வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்களில் விவரங்கள் காண்பிக்கப்படும். இல்லையென்றால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை தேர்தெடுத்து SUBMIT கொடுத்து உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறலாம்.
Madurai to Rajkot