திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஐ.ஆர்.சி.டி.சி நிறுவன முன்பதிவு சேவை தொடக்கம்!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பது ஏழுமலையான் கோவிலில் இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. மேலும் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மூலமாக தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் திருப்பதிக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உக்ரைனின் தலைநகர் கீவில் தொடர்ச்சியாக 35 மணிநேர ஊரடங்கு உத்தரவு – அரசு நடவடிக்கை!
அத்துடன் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நேரடி முறையில் இலவச தரிசன டிக்கெட்டு வழங்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் 2 அல்லது 3 நாட்கள் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியுள்ளது. மேலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் தற்போது பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் தெரிவித்தாவது, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் மூலமாக ரூ.990 சிறப்பு தரிசன டிக்கெட் களை வழங்கி வருகிறது. இதில் பக்தர்களின் தரிசன டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டும். இந்த தரிசன டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதி அன்று திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து பக்தர்கள் வேன் அல்லது கார் மூலமாக அழைத்து வருவார்கள். அதன்பின் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி 1 மணி நேரத்திற்குள் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து முடிப்பார்கள். மேலும் இவர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.