ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை காண பேருந்துகளில் இலவச பயணம் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!

0

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை காண பேருந்துகளில் இலவச பயணம் – உற்சாகத்தில் ரசிகர்கள்…!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மாநகரப் போக்குவரத்து கழக இயக்குனர் தற்போது தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் இலவச பயணம்:

சென்னையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் மாநகப் போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுள்ளதாக போக்குவரத்துக்கு கழக மேலாண் இயக்குனர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம் – ஏப்., 8ம் தேதி நிறைவு!

போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருந்தால் அதை நடத்துனர் இடம் காண்பித்து பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம். பேருந்துகளில் போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கு பிறகும் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதற்கான பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருவெற்றியூர், மணலி,மீஞ்சூர், வள்ளலார் நகர், மூலக்கடை, செங்குன்றம் மற்றும் காரனடை செல்லும் பஸ்களில் பயணிகள் தங்களது டிக்கெட் காண்பித்து இலவசமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!