அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சூப்பர் அறிவிப்பு – மேரா ரேஷன் ஆப் அறிமுகம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் ஒரு புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
மேரா ரேஷன்
இந்தியா முழுவதும் உள்ள இடம்பெரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் பொருட்களை பெறும் வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக 1 கிலோ அரிசியை 3 ரூபாய்க்கும் மற்றும் 1 கிலோ கோதுமையை 2 ரூபாய்க்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் பெற்று கொள்ள முடியும்.
TN Job “FB Group” Join Now
இதேபோல் மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களும் ரேஷன் பொருட்களை பெற முடியும். இதில் தங்கள் கைரேகை பதிவு செய்வதன் மூலமாக தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தின் கீழ் ‘மேரா ரேஷன்’ என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து இதில் ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை பதிவு செய்து தங்களின் கூடுதல் விவரங்களை பெற முடியும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசுத்துறை முக்கிய அறிவிப்பு!
அத்துடன் ரேஷன் கார்டு இல்லாத சூழலில் இந்த மொபைல் செயலியில் உள்ள விவரங்களை ரேஷன் கடை ஊழியர்களுக்கு காண்பித்து கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலியை குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அதிகளவு வெளி மாநிலத்தவர்கள் இருப்பதால் பிற மாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.