தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் ரேஷன் கடைக்கு வரும் பொருள்கள் தரமற்றதாக இருந்தால் அதனை திருப்பி அனுப்புமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழக அரசு உத்தரவு:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். சுமார் 1.96 கோடி மக்கள் ரேஷன் அட்டைகளை மூலம் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரசின் மளிகை பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம், ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி , திராட்சை , ஏலக்காய் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கியது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தொற்று பரவலால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு 200 நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் ஜனவரி 31 தேதியுடன் 2.12 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தரமற்றதாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும் பொருட்கள் தரமான முறையில் இருப்பதை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து இனி ரேஷன் கடைக்கு வரும் மளிகை மற்றும் அரசிடம் இருந்து வழங்கப்படும் பரிசு பொருட்கள் தரமாக இல்லை என்றால் ரேஷன் கடையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அப்பொருட்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து ரேஷனுக்கு வரும் பொருட்கள் தரமாக உள்ளதா என்று ரேஷன் கடை ஊழியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.