பொதுமக்களிடம் கடன், வட்டி, தவணைத் தொகை வசூல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடன் வழங்கியவர்கள் தவணையை திருப்பி தரும்படி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் வந்துள்ளது. இது குறித்து அவர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடன் தவணை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக துறையின் கீழ் செயல்படும் மகளிர் திட்டத்தின் கீழ் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மூலம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!
இந்த குழுக்களுக்கு வணிக வங்கிகள், கூட்டுறவு, தனியார் துறை வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை கொண்டு சிறு தொழில்கள் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா முழு முடக்கம் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தவணை தொகையை சரி வர செலுத்த முடியவில்லை. இதனால் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் வட்டி தொகையை செலுத்த வேண்டும் என நுண் நிதி நிறுவனங்கள் மிரட்டி வந்துள்ளன.
மேலும் இந்த நிறுவனங்கள் மக்களை பெரிதும் துன்புறுத்தியுள்ளனர். இது குறித்த புகார் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனா காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் தனியார் நிறுவனங்கள் மக்கள் கடின போக்கை கருத்தில் கொண்டு வட்டி வசூல் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், இதர நிதி அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும். இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.