தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!

0
தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை - காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!
தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை - காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!
தமிழக அரசு கல்லூரிகளில் முதலில் மாணவர் சேர்க்கை – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதினால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள், ஆதலால் அரசு கல்லூரிகளில் சேர்க்கை முடிந்த பின்னரே தனியார் கல்லூரியில் சேர்க்கை நடத்த வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகின்றது.

மாணவர் சேர்க்கை:

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா ஊரடங்கு பரவல் காரணமாக நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை முக்கால்வாசி கல்வி வாரியங்கள் ரத்து செய்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத உள்ளனர்.

ஆப்பிள் iOS 15 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் – பயனர்கள் குஷி!!

ஆனால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 2 கோடி மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முடிவு செய்ய குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது. அந்த குழுவின் ஆலோசனைபி படி, மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி உயர்கல்வி சேர்க்கை நடக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கு பதிலாக தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திட்டமிட்டு தேர்வுகளை நடத்தி, அக்டோபர், நவம்பர் மாதங்களில் உயர் கல்வியில் சேர்வதற்கான சேர்க்கையை நடத்துவதன் மூலம் மாணவர்களின் நலனும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று இந்த இயக்கம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களே அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் இவர்களின் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை விஷயத்திலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டியது அவசியம். அரசுக் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்த பின்பே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்க வேண்டும். தேர்வினை ரத்து செய்து மாணவர்களை காப்பாற்றி விட்டோம் என பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் எதிர்கால வாழ்வு குறித்தும் யோசிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!