தீவிரமடையும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் – பேருந்துகள் நிறுத்தம்! பொதுமக்கள் அதிர்ச்சி!
புதுச்சேரியில் நேர தகராறு காரணமாக தனியார் பேருந்து ஊழியர்கள் அரசு பேருந்து ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வேலைக்கு வராத ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு
புதுச்சேரியில் சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேர தகராறு காரணமாக கடந்த சில நாட்களில் அரசு பேருந்துகளில் 5 ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். அதன் காரணமாக இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இன்றும் 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
அத்துடன் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சென்னை, மாகே, திருப்பதி, பெங்களூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் கிராமங்களுக்கும் பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. அதனால் புதுச்சேரி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தொடரும் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்களான 12 பேரை போக்குவரத்து கழகம் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செஸ் போட்டி தேதி வெளியீடு!
இதையடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் பணியிலிருந்து நீக்கப்பட்ட 12 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிர்வாகம் சார்பாக வெளியிட்ட சுற்றிக்கையில், போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்ப வேண்டும் மேலும் வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.