பரந்தூர் விமான நிலைய அமைப்பு பணிகள் தீவிரம் – மத்திய அமைச்சர் கோரிக்கை!
சென்னையில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க போதிய நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தி தர வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
விமான நிலையம்
சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில், விமான நிலையம் இயங்கி வருகிறது. சென்னை மற்றும் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கிருந்து விமான பயணம் செய்து வருகின்றனர். விமான நிலையத்திற்கு செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை பரந்தூரில் மற்றொரு விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை – நிதியமைச்சர் விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
அதற்காக 12 கிராமங்களில் 4,700 ஏக்கர் நிலம் தற்போது கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் சுமார் 2400 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலமாகும். மேலும் பெரும்பாலான நிலங்கள், ஏரி நீர் பாசன வசதியுடன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு விரைவில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க போதிய நிலங்களை மாநில அரசு தான் கையகப்படுத்தி தர வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.