அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை – நிதியமைச்சர் விளக்கம்!
2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை பிப்.1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதானி விவகாரங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் விளக்கம்:
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதில் அந்த நிறுவனம் பலஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகமாக கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் பங்கு விலையை உயர்த்தி காட்டுவதற்கு அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனம் குற்றம்சாட்டி இருக்கிறது.
தமிழகத்தில் கிராம உதவியாளர் பணி நியமனம் குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த தகவலால் பங்கு சந்தையில் அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தனர். இது குறித்து நிதியமைச்சர் கூறுகையில், நாட்டின் பொருளாதார கொள்கைகளும் பொருளாதார சூழலும் வலுவாக இருக்கிறது. அதானி குழுமத்தின் பங்கு சரிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.